இந்தியாவில் உள்ள ஓவியர்களில் மிக முக்கியமானவர் ஓவியர் டிரட்ஸ்கி மருது. அவர் மிக ஆழ்ந்த கருத்துடைய ஓவியங்களை படைத்து வருகிறார். ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பொருளை தாங்கி வருகிறது. அதுபோல அவரை வசீகரிக்கும் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் பழக்கமும் உடையவர்.
அவர் படைத்த ஓவியங்களைப் பற்றியும், சந்தித்த மனிதர்களைப் பற்றியும் ’மாடக் குழி’ என்னும் தொடரில் எழுதிவருகிறார்.