Page last updated at Thursday, February 04, 2009 at 11:57:28 PM IST

வீதிக்கு வந்த கடவுள் - ப.கவிதா குமார்



வாடிய முகத்துடன் நேற்றிரவு
எனது வீட்டு வாசலில்
நின்று கொண்டிருந்தான் கடவுள்.
பலநாள் சவரம் செய்யாத முகத்துடன்
எச்சிலை விழுங்கியவாறு
தயங்கியபடியே கேட்டான்
"பசிக்கிறது உணவிருக்கிறதா?"
டியூசன் சென்று வந்த களைப்பில்
அசந்து உறங்கும்
குழந்தைகளைப் பார்த்தவாறே
தட்டில் சோற்றைப் போட்டாள்
என் மனைவி.
பட்டாடை உடுத்தி
சந்தனம், ஜவ்வாது மணக்க
பிரகாரம் சூழ்ந்தவன்
அழுக்கு உடையோடும்
கலைந்த தலையோடும்
வீதிக்கு ஏன் வந்தான்?
தண்ணீர் ஊற்றிய
பழையச் சோற்றைப் பிசைந்து
சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கடவுள்.
என்ன நடந்ததென்று
காலையில் கேட்டுக்கொள்ளலாம்
உறங்கச் சொல்லுங்கள்
என்ற என் மனைவியைப் பார்த்து
கையெடுத்துக் கும்பிட்டவாறு
"உங்கள் குழந்தையின் பொம்மை
ஒன்று கிடைக்குமா" எனக்கேட்டான்.
சின்ன மகளின்
செல்லப்பூனைப் பொம்மையை
அணைந்தவாறு வீதி கடக்கிறான்
எனது குழந்தையாகிப் போன கடவுள்.







வாசகர் கருத்துக்கள் :



mild1970


கடவுள் குறித்து நிறைய கவிதைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பொம்மையுடன் விளையாட நினைத்த கடவுள் என்ற ரசனை அழகான கற்பனை.கவிஞருக்கு வாழ்த்துகள்





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<