நண்பனின் நிசப்த கவிதையின் லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய நிசப்த அலையொன்று என்னையும் ஆட்கொண்டது கால எந்திரத்தின் வழியே நிசப்தத்தை நிறுத்தலாம் என எண்ணியபோது கடிகாரத்தின் வழியாய் புகுந்து கொண்ட நிசப்தம் கைபிடித்து கூட்டிச்சென்று நிறுத்திப்போனது நிசப்தவெளியில். ஆழியெங்கும் நிசப்த அலைகள் உணர்ச்சியின் வேகத்தில் கெட்ட வார்த்தையாய் வெளியேறிய எச்சில் குமிழிகள் யாவும் நிசப்த வெளியெங்கும் சலனமற்று கரைந்த நேரத்தில் கண்டுகொள்ளாத ஏக்கத்தில் கத்தி விரைத்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழ குழந்தை