Page last updated at Monday, September 28, 2009 at 12:45:56 AM IST

கவிதைகள் விற்ப்பவன் - கணேச குமாரன்


பரபரப்பான போக்கவரத்து நிறைந்த
ப்ளாட்பார்மின் ஓரமாய் அமர்ந்து
கவிதைகள் விற்றபடியிருக்கிறான் ஒருவன்

”விலை மலிவானது சார்” ”சிறப்புத் தள்ளுபடி சார்”
என்று வேண்டுகிறான்
இரு கைகளை ஏந்தியபடி
எவரும் ஏற்க மறுத்த கவிகைகளை

கையுட்டாய் பெற்ற இரு கவிதைகளை
என்ன செய்வதென தெரியாமல்
விழிக்கிறார்
பிளாட்பாரக் காவலர் ஒருவர்

பாதசாரிகள் நடமாட்டமில்லாத
பொழுதொன்றில்
சில கவிதைகளை தின்று பசி தீர்த்துக்கொள்கிறான்
தனது குட்டிகளை
தானே தின்னும் தாய்ப்பூனைப் போல்

விலையேதும் பேசாமல்
வேடிக்கை பார்த்த சிறுமியடம்
கடைசிக் கவிதையைக் தந்துவிட்டு
எழுந்து செல்லுமிவன்
மறுநாளும் வருகிறான்
மேலும் சில கவிதைகளுடன்.





வாசகர் கருத்துக்கள் :


கனிமொழி

உண்மை தான்


பரமேஸ்வரி


நல்ல கவிதை கணேசன். எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<