வீழ்த்துவதற்காகவே பயிற்றுவிக்கப் பட்ட அடிமைத் தனங்களை நேசத்தின் காரணமிட்டுக் கூட உலாவர விடாத வானமொன்றிருக்க வெட்ட வெளியின்று உணர்ந்திருந்த இடத்தில் நீர் மேகமென உருமாறிக் கிடக்கு நிரம்பியிருப்பதை உன் மனம் நிராகரிக்கும் படிக்கு நான்கு விரற்கடை குட்டையானவளிடமே வாழ்ந்து பழக்கப் படுத்தப் பட்ட கூண்டுப் புலியாய் நீ இரு சமன்கள் சுகமான பயணமென வாசிக்க முடியா புது மொழி என்னிடமிருக்க பழகிய மொழிதலூடாகவே அர்த்தப் படுத்திக் கொள்கின்றாய் “ காணவில்லை காதலென்று”