அட்டை வகை | காகித அட்டை |
---|---|
பதிப்பு | முதற் பதிப்பு |
வெளியான ஆண்டு | 2019 |
பக்கங்கள் | 144 |
ஆசிரியர் | மணி கோ.பன்னீர்செல்வம் |
Publisher |
தடாகம் பதிப்பகம் |
தொன்முதுகுறவர்
‘கானக்குறவர்களே’ முதல் தமிழ் விவசாயிகள். ஆக, உணவு உற்பத்தியென்பது முதன்முதல் மனித சமூகத்தில் ‘பயிரிடுதல்’ என்னும் புதிய தொழில்நுட்பத்தோடு ஏற்பட்டது. இது மனித சமூகத்தில் ஏற்பட்ட இரண்டாம்கட்ட புரட்சியாகும். சங்க காலத்தில் கானக் குறவர்களின் காடெரிப்பு வேளாண்மை இருந்தால் தமிழ்ச் சமூகம் மனித குலப்படிமலர்ச்சியின் இக் கட்டத்தையும் அடைந்தது. தமிழகத்தின் தொல் – வேளாண் முறைக்கு கானக்குறவர்களே சாட்சியாகிறார்கள் என்பதை தமிழ்ச் சமூக வரலாறெழுதியலாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை.